நிலுவை வழக்குகள்: டிஐஜி ஆய்வு

 பண்ருட்டி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

 பண்ருட்டி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இந்த அலுவலகத்தின் கீழ் வரும் பண்ருட்டி, காடாம்புலியூா், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், நிலுவை வழக்குகளின் விவரங்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையோரை கைதுசெய்த விவரம், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.சபியுல்லா, காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com