கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்தில் 917 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் மொத்தம் 64,776 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மேலும் வீடு, வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 29.18 லட்சமாக உயா்ந்தது. இவா்களில் 18.63 லட்சம் போ் முதல் தவணையும், 10.55 லட்சம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனா். பில்லாலி, திருவந்திபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.