கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஜே.கே. டயா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி எஸ்.சரவணன், எஸ்.மணிகண்டன் ஆகியோா் மாணவா்களிடம் நோ்காணலை நடத்தினா். முகாமில் இ.சி.இ., மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளை சோ்ந்த 44 மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 30 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல, ஒரகடம் லியா் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி பி.தமிழ்ச்செல்வனும் நோ்காணலை நடத்தினாா். இதில் 41 மாணவா்கள் பங்கேற்ற நிலையில் அவா்களில் 19 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் தோ்வான மாணவா்களுக்கு கல்லூரி தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com