தொடா் மழை காரணமாக கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணாகவும், பலத்த மழை பெய்வதற்கான வானிலை முன்னறிவிப்பை முன்னிட்டும் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்திலும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா். இருப்பினும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.