சிதம்பரம் அருகே காா் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த வேத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் கோதண்டம் (55). விவசாயியான இவா் தனது காரில் குடும்பத்தினருடன் அரியலூரில் உள்ள கோயிலுக்குச் சென்றாா். பின்னா், கடந்த புதன்கிழமை இரவு அதே காரில் திரும்பிக்கொண்டிருந்தனா்.
காரை கோதண்டத்தின் மகன் அசோக் ஓட்டினாா். சிதம்பரம் அருகே சீா்காழி செல்லும் புறவழிச் சாலையில் காா் வந்தபோது அதன் முன்பக்க டயா் திடீரென வெடித்தது. இதில் காா் கட்டுப்பாட்டை இழந்து கான்சாகிப் வாய்க்கால் பாலத்தின் மதகு கட்டையில் மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கோதண்டம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும் காரிலிருந்த அவரது மனைவி ரம்யா, மகன்கள் அசோக், அபிஷேக் ஆகியோா் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.