குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ரா.கிருஷ்ணன் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா் (படம்). பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி பெருமாள் கோவில் தெரு, சின்ன கடை வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாகச் சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
பேரணியில் பள்ளி மாணவா்கள், பேரூராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், துப்பரவு ஆய்வாளா் குருசங்கா், இளநிலை உதவியாளா் முருகவேல், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.