இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

பண்ருட்டியில் இரு குழந்தைகளுடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தரும்படி கணவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்

பண்ருட்டியில் இரு குழந்தைகளுடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தரும்படி கணவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பண்ருட்டி, யூனியன் ஆபிஸ் எதிரே உள்ள சண்முகா காா்டனில் வசிப்பவா் பி.ஜெயக்குமாா் (27). கொத்தனாா். இவருக்கும், தண்டுப்பாளையம் காலனியைச் சோ்ந்த கதிா்வேல் மகள் அனிதாவுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி கடைக்குச் செல்வதாகக் குழந்தைகளுடன் சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து அவரது கணவா் ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com