மின்சாரம் பாய்ந்ததில் என்எல்சி ஊழியா் பலி

குள்ளஞ்சாவடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் என்எல்சி ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் என்எல்சி ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சமட்டிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கந்தவேல் (48). என்எல்சி 2-ஆவது அனல் மின் நிலையத்தில் சொசைட்டி தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். காற்றுடன் பெய்த மழை காரணமாக இவரது வீட்டின் முன் உள்ள மரத்தின் கிளை திங்கள்கிழமை மாலை முறிந்து விழுந்தது. அப்போது, இவரது வீட்டுக்குச் செல்லும் மின் வயரும் அறுந்து விழுந்துள்ளது. இதையறியாமல் கந்தவேல் மரக்கிளையை கையால் எடுத்தபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், கந்தவேல் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com