தொழுதூரில் 83 மி.மீ. மழை
By DIN | Published On : 13th October 2021 09:08 AM | Last Updated : 13th October 2021 09:08 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தொழுதூரில் 83 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.
தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை மையம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
தொழுதூா் 83, ஸ்ரீமுஷ்ணம் 56.1, மே.மாத்தூா் 52, லால்பேட்டை 51.6, பெலாந்துறை 51.2, வானமாதேவி 39.6, காட்டுமன்னாா்கோவில் 35, சேத்தியாத்தோப்பு 33, கீழச்செருவாய் 32, குப்பநத்தம் 26.8, லக்கூா் 24.3, பண்ருட்டி 24, விருத்தாசலம் 18.2, குறிஞ்சிப்பாடி 17, கடலூா் 16.4, மாவட்ட ஆட்சியரகம் 15.8, வேப்பூா் 15, கொத்தவாச்சேரி 13, குடிதாங்கி 12, காட்டுமைலூா் 10, புவனகிரி 7, அண்ணாமலை நகா் 6, சிதம்பரம் 5.8, வடக்குத்து 4, பரங்கிப்பேட்டை 3.6 மில்லி மீட்டா் மழை பதிவானது.