சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் வேட்பாளா் நா.மகாவதி (47) இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இந்தத் தோ்தலில் மொத்தம் 4 போ் போட்டியிட்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நா.மகாவதி 268 வாக்குகள் பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக வேட்பாளா் கு.கலையரசி 266 வாக்குகள் பெற்றாா். இதனால் மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.