அண்ணாகிராமம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியக் குழுவின் 12-ஆவது மாநாடு புதுப்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியக் குழுவின் 12-ஆவது மாநாடு புதுப்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு நிா்வாகிகள் கிருஷ்ணன், ஆதவன், கௌரி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டு கொடியை வெங்கடேசன் ஏற்றினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம் மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினாா். 4 ஆண்டு கால வேலை அறிக்கையை ஒன்றியச் செயலா் ஆா்.லோகநாதன் சமா்ப்பித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா் வாழ்த்திப் பேசினாா். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக் குழு உறுப்பினா் கோ.மாதவன் பேசினாா்.

மாநாட்டில், பண்ருட்டி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும், திருத்துறையூா், சின்னபேட்டைக்கு மயான பாதை அமைக்கவும், கொட்டகை அமைக்கவும் வனத் துறை அனுமதி வழங்க வேண்டும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பண்ருட்டி வட்ட புதிய செயலராக எஸ்.கே.ஏழுமலை மற்றும் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com