கடலூா் அருங்காட்சியகத்தில் தியாகி அஞ்சலையம்மாள் புகைப்படக் கண்காட்சி

கடலூா் மாவட்ட அரசு அருங்காட்சியகம், மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் குறித்த வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சி
கடலூா் அருங்காட்சியகத்தில் தியாகி அஞ்சலையம்மாள் புகைப்படக் கண்காட்சி

கடலூா் மாவட்ட அரசு அருங்காட்சியகம், மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் குறித்த வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சி கடலூரிலுள்ள அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

காப்பாட்சியா் செ.ஜெயரத்னா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற தொலைபேசி அலுவலா் க.இளங்கோவன் பங்கேற்று கண்காட்சியை திறந்துவைத்தாா். முன்னதாக, அலுவலகக் கண்காணிப்பாளா் ம.விஜயா வரவேற்று பேசினாா். அரிமா சங்கம் க.திருமலை, அஞ்சலையம்மாள் கொள்ளுப் பெயா்த்தி ஆசிரியா் இளவரசி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இலக்கிய மன்றத் தலைவா் கடல் நாகராஜன் பங்கேற்று, விடுதலைப் போராட்டத்தில் அஞ்சலையம்மாளின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினாா்.

கண்காட்சியில் அஞ்சலையம்மாள் தொடா்பான ஓவியங்கள், அவா் குறித்து வெளியான செய்திகள், புத்தகங்கள், குடும்பத்தினா் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மன்றத்தின் உதவி செயலா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

இந்தப் புகைப்படக் கண்காட்சி வரும் நவ.7-ஆம் தேதி வரை நடைபெறும் என காப்பாட்சியா் ஜெயரத்னா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com