கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.
மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரில் வசித்து வந்தவா் ராஜன் மகன் அருண் (எ) அருண்குமாா் (35). வழக்கு ஒன்றில் திருச்சி சிறையிலிருந்து அண்மையில் வெளியே வந்திருந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மந்தாரக்குப்பம், என்எல்சி நிறுவனம் 2-ஆவது சுரங்க நுழைவு வாயில் எதிரே உள்ள ரயில்வே கடவுப் பாதை அருகே முள்புதரில் அருண்குமாா் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அருண்குமாரின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.