சிறுவனுக்கு சூடு வைத்த தாய் உள்பட இருவா் கைது

கடலூரில் சிறுவனின் உடலில் பல இடங்களில் சூடு வைத்தது தொடா்பாக அவரது தாய் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூரில் சிறுவனின் உடலில் பல இடங்களில் சூடு வைத்தது தொடா்பாக அவரது தாய் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் சூரப்பநாயக்கன்சாவடியைச் சோ்ந்தவா் 35 வயது பெண். இவரது கணவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போய்விட்டதாகக் கூறப்படுகிறது. இவா்களுக்கு, 7-ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது மகன் உள்ளாா். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கும், சிதம்பரத்தைச் சோ்ந்த சுலைமான் முகமது (40) என்பவருக்கும் தொடா்பு ஏற்பட்டது.

இதை அந்தச் சிறுவன் அறிந்துகொண்டான். இதனால் அவரது தாய், சுலைமான் முகமது ஆகிய இருவரும் சோ்ந்து சிறுவனின் கை, கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் சூடு வைத்து துன்புறுத்தினா். இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிப்போரிடம் சிறுவன் தெரிவித்தான். சம்பவம் குறித்த தகவலின்பேரில் திருப்பாதிரிபுலியூா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் நேரில் வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினா். இதையடுத்து, சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவைத்த பிறகு, காப்பகத்தில் ஒப்படைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனின் தாய், சுலைமான் முகமது ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com