மாட்டு வண்டித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் உள்ள மாட்டுவண்டித் தொழிலாளா்களுக்காக கிளியனூா், ஆதனூா், அம்புஜவல்லிபேட்டை, கூடலையாத்தூா் ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகளை அமைத்துத் தர வேண்டும், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், 44 தொழிலாளா் நலச் சட்டங்களையும் நான்கு தொகுப்புகளாக திருத்துவதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் திருமுருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநில துணைத் தலைவா் கருப்பையன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் சங்கமேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா். பின்னா் சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com