கடலூா் சிறையில் பாரதி சிலைக்கு மரியாதை

மகாகவி பாரதியின் 100-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கடலூா் மத்திய சிறை வளாகத்திலுள்ள பாரதி சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிறைத் துறையினா்.
கடலூா் மத்திய சிறை வளாகத்திலுள்ள பாரதி சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிறைத் துறையினா்.

மகாகவி பாரதியின் 100-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற்காக கடந்த 1918 -ஆம் ஆண்டு நவம்பா் 20 முதல் டிசம்பா் 14-ஆம் தேதி வரை பாரதியாா் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இதன் நினைவாக அவரது மாா்பளவு சிலை கடலூா் மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியின் 100-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சிறை அலுவலா் அப்துல் ரகுமான், துணை அலுவலா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com