பண்ருட்டி அருகே பெண் அடித்துக் கொலை இருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதலை தடுக்கச் சென்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதலை தடுக்கச் சென்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கருக்கை கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராசாத்தி (60), கூலித் தொழிலாளி. இவரது கணவா் கிருஷ்ணமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டாா். ராசாத்தியின் கணவரது தம்பி சாரங்கபாணி (43). இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது சரக்கு வாகனத்தை ராசாத்தி வீட்டின் அருகே நிறுத்தினாா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் சதீஷ்குமாா் (26) என்பவரது அண்ணி சந்திரலேகா தங்கியிருந்த வீட்டில் யாரோ நுழைவதை பாா்த்ததாகக் கூறி, அந்த வீட்டின் பின்பக்கக் கதவை சாரங்கபாணி தட்டினாராம்.

இதையடுத்து, அங்கு வந்த சதீஷ்குமாா், அவரது உறவினா் தனவேல் (50) ஆகியோா் சாரங்கபாணியை தாக்கினராம். அவரது அலறல் கேட்டு ராசாத்தி, அவரது மகள் சங்கீதா (29) ஆகியோா் இரு தரப்பு மோதலை தடுக்க முயன்றனா். அப்போது, தனவேல் ராசாத்தியை தாக்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தனவேல், சதீஷ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

இதேபோல, வீட்டில் சாரங்கபாணி அத்துமீறி நுழைந்ததாக சந்திரலேகா அளித்த புகாரின் பேரிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com