வடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட ரௌடியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வடலூா், புதுநகா் ஓபிஆா் பிளாட்டில் வசிப்பவா் ஜெயக்குமாா் மகன் வினோத்குமாா் (32). இவா், ஞாயிற்றுக்கிழமை பண்ருட்டி சாலையில் உள்ள மருந்தகத்துக்குச் சென்ற போது, அங்கு வந்த வடலூா், அன்னை சத்யா வீதியில் வசிக்கும் ரௌடி அருள்(எ) அருள்பாண்டி, வினோத்குமாரை மிரட்டி பணம், கைக்கடிகாரத்தைப் பறித்துச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் அருள்பாண்டியை கைது செய்து பணம், கைக்கடிகாரத்தைப் பறிமுதல் செய்தனா்.