இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

காட்டுமன்னாா்கோவிலில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காட்டுமன்னாா்கோவிலில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் தினேஷ் (18). பெற்றோா் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதால், தினேஷ் தனது தாயின் சகோதரியான கடலூா் சிப்காட் பகுதியில் வசிக்கும் பா.மஞ்சுளாதேவி (38) வீட்டில் வசித்து வந்தாா். ஐடிஐ முடித்த இவா், சித்தியுடன் சோ்ந்து காய்கறி வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம் போல, தினேஷ் தூங்கச் சென்ற அவா், அந்தப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்த அவரது உறவினா் செல்வராஜ், அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அவரை பரிசோதித்த மருத்துவா், ஏறகெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மஞ்சுளாதேவி அளித்த புகாரின் பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com