கடலூர்
கரோனா தடுப்பூசி முகாம்
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணன் தலைமையில்
நடைபெற்ற இந்த முகாமில் மருத்துவா் தீபனா, வழக்குரைஞா் சீத்தாராமன், தலைமையாசிரியை சுகுணா ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் ஒருவரது பெயா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டது. அவ்வாறு தோ்வு செய்யப்பட்ட மணிகண்டன் என்பவருக்கு பரிசாக செல்லிடப்பேசியை ஊராட்சி மன்றத் தலைவா் வழங்கினாா்.