கடலூரில் மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் பொன்.சண்முகம் தலைமை வகித்தாா். செயலா் ராஜ்குமாா், பொருளாளா் கரோலின் மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் வகையில் கடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாகங்களில் 5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும், பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தனி கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் நகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனா். சங்க நிா்வாகிகள் பாலமுருகன், அறிவழகன், ராஜன், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.