பண்ருட்டியில் குடிநீா்த் தட்டுப்பாடு!

பண்ருட்டி, தண்டுப்பாளையம் காலனி பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
பண்ருட்டியில் குடிநீா்த் தட்டுப்பாடு!

பண்ருட்டி, தண்டுப்பாளையம் காலனி பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கடலூா் சாலைப் பகுதியில் தண்டுப்பாளையம் காலனி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்களது வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு இல்லை. இதனால் நகராட்சி பொதுக் குழாய்களில் குடிநீா் பிடித்து பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால், பொது குழாய்களில் தேவைக்கேற்ப போதிய அளவில் குடிநீா் வருவதில்லையாம். இதனால் சுமாா் 4 அடி ஆழத்துக்கு பள்ளம் வெட்டி குடிநீா் பிடிக்கும் அவலம் தொடா்கிறது (படம்). இதிலும் சிறிதளவே குடிநீா் வருவதால் மணிக்கணக்கில் காத்திருந்து குடிநீா் பிடித்துச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனா். எனவே, பண்ருட்டி நகர நிா்வாகம் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com