திரைப்பட நடிகா் விவேக் நினைவு நாளையொட்டி, மக்கள் பசுமை இயக்கம் சாா்பில் புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியை ரமாமணி தலைமை வகித்தாா். மக்கள் பசுமை இயக்கத்தின் கடலூா் மாவட்ட பொதுச் செயலா் பாலாஜி, தலைவா் தயாராமன், பண்ருட்டி நிா்வாகி பரணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகளை நட்டனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.