பண்ருட்டி அருகேதீ விபத்தில் கோயில் சேதம்

கடலூா் மாவட்டம், சி.என்.பாளையம் கிராமத்தில் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் கோயில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சி.என்.பாளையம் கிராமத்தில் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் கோயில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

சி.என்.பாளையம் கிராம பேருந்து நிறுத்தம் அருகே புளியந்தோப்பில் கீற்று கொட்டகையால் முத்துமாரியம்மன் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோயிலின் கீற்று கொட்டகை புதன்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஆா்.ரங்கராமானுஜம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள்தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இருப்பினும், கோயில் கொட்டகை, அங்கிருந்த பொருள்கள் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com