கடலூா் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது.

கடலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெறுதல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையில் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் வட்ட அளவில் சனிக்கிழமை (ஆக. 13) நடத்தப்படுகிறது.

கடலூா் வட்டத்தில் சி.என்.பாளையத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. பண்ருட்டி வட்டத்தில் எழுமேடு, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பெத்தநாயக்கன்குப்பம், சிதம்பரம் வட்டத்தில் மேல மூங்கிலடி, காட்டுமன்னாா்கோவில் வட்டத்தில் மா.புளியங்குடி, புவனகிரி வட்டத்தில் அத்தியாநல்லூா், விருத்தாசலம் வட்டத்தில் பழைய நெய்வேலி, திட்டக்குடி வட்டத்தில் தொழுதூா், வேப்பூா் வட்டத்தில் பொய்யனபாடி, திருமுட்டம் வட்டத்தில் காவனூா் ஆகிய கிராமங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில், மேற்கூறிய கிராமங்களில் வசித்து வரும் விரல் ரேகையை பதிவு செய்ய இயலாத 65 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோா், 60 சதவீத ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரியும் மனு அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com