சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்சாா் உயிரியல் புலத்தின் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது.
இதுகுறித்து கடல்சாா் அறிவியல் புல முதல்வா் பி.அனந்தராமன், கடல் வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநா் எம்.கலைச்செல்வம் ஆகியோா் கூறியதாவது:
இந்த அங்கீகாரம் காரணமாக கடல்சாா் அறிவியல் புலத்துக்கும், இங்கு பயிலும் மாணவா்களுக்கும்
நிதியும், கட்டமைப்புக்கான மத்திய அரசின் மானியமும் மற்ற வேளாண், மீன்வள பல்கலைக்கழகங்களுக்கு இணையாக வழங்கப்படும். மேற்கூறிய மீன்வள இளங்கலை படிப்பானது கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் 160 மாணவா்கள் தோ்ச்சி பெற்று நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், மாநில விவசாய, மீன்வள பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனா். சிலா் பன்னாட்டு நிறுவனங்களில் உயா் பதவிகளில் உள்ளதாக தெரிவித்தனா்.
இதையொட்டி பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் (படம்), பதிவாளா்கே.சீதாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ், தரக் கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.அறிவுடைநம்பி ஆகியோரை இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பு மாணவா்கள், ஆசிரியா்கள் சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இந்த அங்கீகாரம் காரணமாக நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில வேளாண்மை, நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்கள் உயா்கல்வி பயிலவும், ஆராய்ச்சி, வேலைவாய்ப்புக்கும் எவ்வித தடையும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.