வடலூா் சுத்த சன்மாா்க்க நிலையம் சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 52-ஆவது நினைவு தினம் வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஓபிஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ரா.செல்வராஜ் ஓமந்தூராரின் படத்துக்கு மலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி வரவேற்றுப் பேசினாா். பின்னா், சுத்த சன்மாா்க்க நிலைய சிறப்பிதழை அவா் வெளியிட, முதல் பிரதியை பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம் பெற்றுக்கொண்டாா்.
செயற்குழு உறுப்பினா் கி.இளங்கோவன், பொருளாளா் பூ.ஆசைதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுத்த சன்மாா்க்க நிலைய துணைத் தலைவா் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ரொக்கம், பரிசுப் பொருள்கள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா். இதேபோல, ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள், விரிவுரையாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, ஊரன் அடிகள் படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினா்.