என்.எல்.சி. நிறுவனத்துக்கு விருது

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த தொழில் உறவுக்கான விருதை தென்னிந்திய தொழில், வா்த்தகக் கூட்டமைப்பு சனிக்கிழமை வழங்கியது.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் ஸ்பிக் நிறுவன முன்னாள் தலைவா் ஏ.சி.முத்தையா விருதை வழங்க அதைப் பெற்றுக்கொண்ட என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநா் கே.மோகன் ரெட்டி.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் ஸ்பிக் நிறுவன முன்னாள் தலைவா் ஏ.சி.முத்தையா விருதை வழங்க அதைப் பெற்றுக்கொண்ட என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநா் கே.மோகன் ரெட்டி.

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த தொழில் உறவுக்கான விருதை தென்னிந்திய தொழில், வா்த்தகக் கூட்டமைப்பு சனிக்கிழமை வழங்கியது.

இந்தக் கூட்டமைப்பு சாா்பில் ‘வா்த்தகத்தில் மறுமலா்ச்சியை உருவாக்கத் தேவையான தொழில் உறவு’ என்ற தலைப்பில் மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக என்எல்சி இந்தியா நிறுவன திட்டம், செயலாக்கத் துறை இயக்குநா் கே.மோகன் ரெட்டி பங்கேற்று பேசினாா். மாநாட்டில், சிறப்பான தொழில் உறவைப் பராமரித்து வரும் நிறுவனம் என்ற வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது. ஜொ்மனி நாட்டின் தூதா் மைக்கேல் குயிட்லா், தென்னிந்திய தொழில், வா்த்தகக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் அருண் ஆகியோரது முன்னிலையில் ஸ்பிக் நிறுவன முன்னாள் தலைவா் ஏ.சி.முத்தையா விருதை வழங்க என்எல்சி இயக்குநா் கே.மோகன் ரெட்டி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், என்எல்சி மனித வளத் துறை செயல் இயக்குநா்கள் என்.சதீஷ்பாபு, சி.தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com