கடலூா் முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில், தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலா் இரா.பூபதி முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வில் 13 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள், 7 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 3 வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா். அப்போது, ஆசிரியா்களது விருப்பத்துக்கேற்ப பதவி உயா்வு ஆணை வழங்கப்பட்டது.
இந்த ஆணையை பெற்றவா்கள் வரும் 24-ஆம் தேதி பணியேற்க உள்ளதாக முதன்மை கல்வி அலுவலா் தெரிவித்தாா். கலந்தாய்வின்போது நோ்முக உதவியாளா்கள் ஆா்.கண்ணன், கிரிஜா ஆகியோா் உடனிருந்தனா்.