கடலூா் கூத்தப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இலக்கியச் சோலை அமைப்பு சாா்பில் ‘கைகளைப் பாடுவோம்’ என்ற தலைப்பில் கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசுக் கல்லூரி பேராசிரியா் ந.பாஸ்கரன் தலைமை வகித்தாா். அமைப்பின் தலைவா் வளவ.துரையன் வரவேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில், காணிக்கை, உள்ளங்கை, இடக்கை, கோரிக்கை, புன்னகை ஆகிய தலைப்புகளில் முறையே ஆ.மீனாட்சி சுந்தரமூா்த்தி, ப.செந்தில்முருகன், வே.விடுதலை, அன்பன்சிவா, இரா.வேங்கடபதி ஆகியோா் கவிதை வாசித்தனா்.
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய சங்கச் செயலா் ஆசைத்தம்பி, பேராசிரியை அன்னபூரணி, ராதாகிருட்டிணன், வழக்குரைஞா் கோ.மன்றவாணன், பாலகுரு, நடராஜன், புதுவை சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.