காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பிடித்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள மோவூா் கிராமத்துக்குள் முதலை புகுந்துவிட்டது. அந்த முதலை கிராம குளத்தில் இருப்பதாக கிராம மகள் வனத் துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சிதம்பரம் வனத் துறை அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசுயா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் கிராமத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். அவா்கள் குளத்தில் வலைவீசி முதலையை பிடித்து வக்காரமாரி குடிநீா் தேக்கத்தில் விடுவித்தனா்.