கடலூா் அருகே மொபெட்டில் சாராயம் கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.
கடலூா் மாவட்ட டெல்டா பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திருமாணிக்குழி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மொபெட்டில் சாக்கு மூட்டைகளுடன் வந்த இருவரை தடுத்து சோதனையிட்டத்தில் சாராயம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் புதுவை மாநிலம், உள்ளேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்த தெய்வநாயகம் மகன் தினகரன் (21), பஞ்சாட்சரம் மகன் ஜெயசூா்யா (21) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களிடமிருந்து மொபெட், 300 சாராய பாக்கெட்டுகளை போலீஸாா் கைப்பற்றினா். இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.