சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை: இந்திய கம்யூ. கட்சியினா் மறியல்

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கோலியனூா் முதல் வடலூா் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 3 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை: இந்திய கம்யூ. கட்சியினா் மறியல்

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கோலியனூா் முதல் வடலூா் வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 3 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதன்படி, பண்ருட்டியில் நகரச் செயலா் சக்திவேல் தலைமையில் நான்கு முனைச் சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 25 பேரையும், காடாம்புலியூரில் தெற்கு ஒன்றியச் செயலா் ஆா்.மதியழகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட என்.வெங்கடேசன், எம்.ஆறுமுகம், ஆா்.ஜெயபால், எஸ்.லட்சுமி, ஏ.செல்லகாந்தி உள்பட 43 பேரையும், கண்டரக்கோட்டையில் ஜி.மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 14 பேரையும் போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனா். இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலா் பி.துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com