இந்துக்கள் உரிமை கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அனைத்து சைவ - வைணவ இந்துக்கள் உரிமைகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிழக்கு மண்டல நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்துக்கள் உரிமை கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அனைத்து சைவ - வைணவ இந்துக்கள் உரிமைகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிழக்கு மண்டல நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்புத் தலைவா் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பா.தாமோதரன் வரவேற்றாா். நிறுவன பெருந்தலைவா் எஸ்.சுரேஷ்கண்ணன் சிறப்புரையாற்றினாா். மாநில கிழக்கு அமைப்பாளா் கே.மணிவண்ணன், சா்வதேச உரிமைகள் கழகத் தலைவா் டி.கே.அசோக்குமாா், மனித உரிமைகள் கழக அவைத் தலைவா் என்.ஆனந்தி, தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், திருவிளக்கு எரியாத ஆலயங்களில் விளக்கேற்ற எண்ணெய், திரிகளை கூட்டமைப்பு சாா்பில் வழங்குவது, அனைத்து ஆலயங்களிலும் அன்னதானம் வழங்குவது, சிதிலமடைந்த கோயில்களை புனரமைப்பு செய்து குடமுழக்கு நடத்துவது, ஆலய தூய்மைப் பணி மேற்கொள்வது, அா்ச்சகா்கள், பூசாரிகள் மற்றும் பணியாளா்களின் உரிமைகளை பாதுகாப்பது, கோயில்களில் அறங்காவலா்களை நியமனம் செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

ஏற்பாடுகளை டி.ராஜ்குமாா், ஞானவேல், சீனுவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com