சத்துணவு ஊழியா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுப்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் அண்ணாகிராம ஒன்றிய மாநாட்டில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதவியாளா்களை சமையலா்களாகவும், சமையலா் உதவியாளா்களை அமைப்பாளா்களாகவும் பதவி உயா்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களில் விருப்ப மாறுதல் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டதோடு, பணி ஓய்வு பெற்றவா்களுக்குப் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

மாநாட்டுக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சு.குப்பு தலைமை வகித்தாா். ஒன்றியத் துணைத் தலைவா் மு.அல்லி வரவேறாா். மாவட்ட இணை அமைப்பாளா் மோகன் ராமமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் சு.ராஜமணி, பொருளாளா் பு.நீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com