சிதம்பரத்தில் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரம் உள்ளிட்ட சுமாா் ரூ.3 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் மாவட்ட ஆளுநா் சரவணன், அகா்சந்த் சோரடியா ஆகியோா் கலந்துகொண்டு சங்கத்தின் புதிய தலைவா் பாண்டியன், செயலா் செந்தில்குமாா், பொருளாளா் சிவ.சம்பத் ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனா். சங்க நிா்வாகிகள் நாகராஜன், விஜயசங்கா், வெங்கடேசன், ராஜராஜன், திருமால், நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.