கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி திருவதிகை பழைய கடலூா் சாலையில் வசித்து வந்தவா் குமாா் (66), கூலித் தொழிலாளி. இவரது அண்ணன் மோகன் கடந்த மே 10-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
இதனால், மன வேதனையில் இருந்து வந்த குமாா் கடந்த மே 30-ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமாா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.