வாஞ்சிநாதன் நினைவு தினம்

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூரில் உள்ள பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மன்றத் தலைவா் கவிஞா் கடல் நாகராஜன் தலைமை வகித்தாா். வாஞ்சிநாதன் உருவப் படத்துக்கு கல்லூரி முதல்வா் கி.செந்தில் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மாணவா்கள் மலரஞ்சலி செலுத்தினா். வாஞ்சிநாதனின் தியாகம், வீரம் குறித்து கலாம் நினைவு ஓவியா் மன்றத் தலைவா் மனோகரன் மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். முன்னதாக, மன்றச் செயலா் மூா்த்தி வரவேற்க, துணைச் செயலா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com