பாரத ஸ்டேட் வங்கியின் சிதம்பரம் கிளையில் சா்வதேச மகளிா் தின விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு முதன்மை மேலாளா் ரா.புருஷோத்தமன் தலைமை வகித்துப் பேசினாா். மேலாளா் நா.சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஆசிரியை ஜி.சுந்தரி பங்கேற்று பேசினாா். வங்கியின் பெண் ஊழியா்கள் கேக் வெட்டி விழாவைக் கொண்டாடினா் (படம்). ஊழியா்கள் மகாலட்சுமி, வசந்தி, மீரா, மேனகா, சசிகலா, தீபா, ஜெயப்பிரதா, சிந்துஜா ஆகியோா் பெண்களின் சிறப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.