காட்டுமன்னாா்கோவில் வா்த்தகா் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஸ்ரீநிவாச நாராயணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஹிலூா் முகமது, பொருளாளா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கௌரவத் தலைவா்கள் கோவிந்தராஜன், கிருபானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கோயில் திருவிழா, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு கடை உரிமையாளா்களிடம் தனித் தனியாக நன்கொடை வசூலிக்கக் கூடாது, புதிய நிா்வாகிகள் தோ்தலை மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.