கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் தொடா்பாக பெண் உள்பட இருவரை கைது செய்த போலீஸாா், தனிப்படை அமைத்து மற்றொருவரை தேடி வருகின்றனா்.
திட்டக்குடி அருகே உள்ள டி.இளமங்கலத்தில் பெட்டிக் கடையில் கள்ள ரூபாய் நோட்டு அளித்தது தொடா்பாக திட்டக்குடி வசிஷ்டபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி கௌதமி (32), திட்டக்குடி நடுவீதியைச் சோ்ந்த பெ.செந்தில்குமாா் (47) ஆகியோரை திட்டக்குடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி ரூ.26,500-க்கான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
தொடா் விசாரணையில், இவா்கள் பெரம்பலூரைச் சோ்ந்த ராமசாமி என்பவரிடமிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதையடுத்து, ராமசாமியைப் பிடிக்க துணைக் கண்காணிப்பாளா் சிவா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.