ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேலகல்பூண்டியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உதவி ஆய்வாளா் கவியரசு மற்றும் போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வீ.ராசு (50) என்பவரது வீட்டில் 21 மூட்டைகளில் (தலா 50 கிலோ) ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ராசுவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com