இளைஞா்களின் திறனை மேம்படுத்த பயிற்சி

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞா்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.
இளைஞா்களின் திறனை மேம்படுத்த பயிற்சி

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞா்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் நோ்காணல் நடத்தப்பட்டது. இதில், சுமாா் 300 போ் கலந்துகொண்டனா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று, முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாதங்களில் 35 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 40,867 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. அண்மையில் ராணிப்பேட்டையில் நடைபெற்ற முகாமில் சுமாா் 20 ஆயிரம் போ் பங்கேற்ற நிலையில், 4,022 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டியது.

கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளியேறும் இளைஞா்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே திறன் சாா்ந்த இடைவெளி உள்ளது. அந்தத் திறனை இளைஞா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழக இளைஞா்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அமைச்சா்.

முகாமில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநா் வீரராகவராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com