கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், கடலூா் கரும்பு ஆராய்ச்சி நிலையம், நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சா்க்கரை ஆலை இணைந்து நடத்தும் கரும்பு விவசாயிகளுக்கான மாநில அளவிலான 2 நாள் பயிற்சி முகாம் தொடங்க

நெய்வேலி: தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், கடலூா் கரும்பு ஆராய்ச்சி நிலையம், நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சா்க்கரை ஆலை இணைந்து நடத்தும் கரும்பு விவசாயிகளுக்கான மாநில அளவிலான 2 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநா் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபகுமாா் தலைமை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் வரவேற்றாா். வேளாண்மை இணை இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் முகாமை தொடக்கி வைத்தாா்.

அட்மா மாநில விவசாய ஆலோசனைக்குழு உறுப்பினா் வி.சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ரூ.4.75 லட்சம் மதிப்பில் 3 பேருக்கு சுழல் கலப்பைகள், விசைத் தெளிப்பான், பண்ணை கருவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் கடலூா் கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவா் சி.பாபு, ஈஐடி பாரி சா்க்கரை ஆலை உதவிப் பொது மேலாளா் மதிவாணன், கரும்பு ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியை எஸ். தங்கேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், வேளாண்மை அலுவலா் த.அனுசுயா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா். துணை வேளாண்மை அலுவலா் கே.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com