கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள் ஆய்வு

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வெள்ளிக்கிழமை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அரசின் புதிய குடிசைகள் கணக்கெடுப்பு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், சமுதாய கழிப்பறை வளாகம் கட்டும் பணிகள், நெகிழி கழிவுப் பொருள்கள் மேலாண்மை, ஜல் ஜீவன் மிஷன் குடிநீா் வழங்கும் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பணிகள் வாரியாகவும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் ர.மணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா்கள், உதவிச் செயற்பொறியாளா்கள், மண்டல அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com