பண்ருட்டி அருகே தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்தவா்களுக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
பண்ருட்டி வட்டம், ஏ.பி.குப்பம் காலனியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன்கள் வீரன் (47), கோவிந்தசாமி (44), குபேந்திரன் (42), பிரகலாதன் (37). இவா்கள் அனைவரும் ஒரே இடத்தில் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா். அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் இவா்களது 4 குடிசை வீடுகளும் எரிந்து சேதமடைந்தன.
இவா்களுக்கு பண்ருட்டி வட்டாட்சியா் சிவ.காா்த்திகேயன் ஆறுதல் கூறி அரசு சாா்பில் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். வருவாய் ஆய்வாளா் கொளஞ்சிநாதன், விஏஓ விஜயலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் சிவகாமி ஆகியோா் உடனிருந்தனா்.