இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் உலக செஞ்சிலுவை தின விழா அண்மையில் நடைபெற்றது.
இதையொட்டி சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு 3 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிதம்பரம் வருவாய்க் கோட்டாட்சியரும்,
செஞ்சிலுவை சங்கத் தலைவருமான கே.ரவி தலைமை வகித்து குடிநீா் தொட்டியை வழங்கினாா். மேலும், சங்கத்தின் புதிய உறுப்பினா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பி.ரவி வாழ்த்துரை வழங்கினாா். செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல்சந்த் கோத்தாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.