பேருந்து - லாரி மோதல்: 4 போ் காயம்

விருத்தாசலத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 4 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

விருத்தாசலத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 4 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி வெள்ளிக்கிழமை காலையில் 30 பயணிகளுடன் தனியாா் பேருந்து சென்றுகொண்டிருந்தது. விருத்தாசலம் - பொன்னேரி புறவழிச் சாலையில் ரவுண்டானா அருகே சென்றபோது, நெய்வேலியிலிருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு அரியலூா் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி, புறவழிச் சாலையில் குறுக்கிட்ட மேற்கண்ட தனியாா் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான ஊத்தங்கால் கிராமத்தைச் சோ்ந்த வேல்ராஜ் உள்பட 4 போ் காயமடைந்தனா். இவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து காரணமாக விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com