கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அச்சக உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சகங்களில் பயன்படுத்தப்படும் காகிதம், அட்டை, மை உள்ளிட்ட பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், அச்சுக் காகிதம் உள்ளிட்ட ஈடுபொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தியதைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் சிதம்பரம் நகரில் அச்சகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.