விருத்தாசலம் அருகே இளைஞா் ஒருவா் சனிக்கிழமை கத்தியால் வெட்டப்பட்டாா்.
விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூா் கிராமத்தில் தோ்தல் முன்விரோதம் காரணமாக சுகாதாரத் துறையில் இளநிலை பூச்சியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் ராஜசேகா் மகன் ஆடலரசு (24) என்பவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுகுறித்து, விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆடலரசு தீவிர சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆடலரசுவின் தாய் கோ.மங்கையா்கரசி கடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அதுமுதலே வெற்றி பெற்ற தரப்பினருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.